பாரிசில் பதற்றம் – இரண்டாம் உலகப்போரில் வெடிக்காத நிலையிலுள்ள வெடிகுண்டு கண்டுபிடிப்பு

Rajan
By
1 Min Read
வெடிகுண்டு 

பாரிஸின் செயின்ட் டெனிஸ் புற நகர்ப்பகுதியின் இரயில் பாதைகளில் இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட வெடிக்காத வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக லண்டனுக்கான யூரோஸ்டார் பயணமும், வடக்கு பிரான்சுக்கான ரயில்களும் நிறுத்தப்படுகின்றது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, பாரிஸின் டெமினிங் குழுவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்போது அந்த இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக ஒரு பாதுகாப்பு சுற்றளவு நிறுவப்பட்டதோடு, கரே டு நோர்டில் இருந்து நகரங்களுக்கு இடையேயான மற்றும் புறநகர் பாதைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கரே டு நோர்ட் ஒரு முக்கிய ஐரோப்பிய போக்குவரத்து மையமாகும்,

இது பிரான்சின் வடக்கே உள்ள சர்வதேச இடங்களுக்கும், முக்கியமாக பாரிஸ் விமான நிலையத்திற்கும் மற்றும் பல பிராந்திய பயணங்களுக்கும் மையமாக இருக்கின்றது.

“பயப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை” என அதிகாரிகளால் சொல்லப்பட்டாலும் குறித்த பிரதேசங்களில் பதற்றம் நிலவுகின்றது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *