கம்பஹா, திவுலப்பிட்டிய பகுதியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 21 வயது யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திவுலப்பிட்டிய ஹொரகஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த, யுவதியிடமிருந்து 10 கிராம் ஹெரோய்ன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட யுவதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com