கண்டி பிரதான ரயில் நிலையத்தில் உரிய சமிக்ஞை கிடைக்காததால் ரயில் ஒன்று மற்றொரு ரயில் பயணிக்கும் மேடையில் நிறுத்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் சமிக்ஞை கட்டமைப்பை கையாளும் இரண்டு பணியாளர்களின் அசமந்த போக்கினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மேடையில் மற்றுமொரு ரயிலும் பயணிக்க தயாராக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பொடிமெனிக்கே ரயிலே கண்டி ரயில் நிலையத்தின் 3ஆவது மேடையை சென்றடைந்துள்ளது.
மேடை மாறி பயணித்த ரயிலின் ஓட்டுனரின் சாதுரியத்தால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இதன்போது கடமை தவறிய சமிக்ஞை கட்டமைப்பை கையாளும் பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Link: https://namathulk.com