முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
அத்துடன், இம்முறை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து போட்டியிடுவதற்காக இளம் வேட்பாளர்களை பெருமளவில் முன்னிறுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளதாகவும் முன்னாள் சபாநாயகர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்களில் பெண்கள் மற்றும் தன்னைப் போன்ற மூத்த நபர்களும் அடங்குவர் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
Link: https://namathulk.com