முல்லைத்தீவு, தென்னியங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்.

Aarani Editor
1 Min Read
முல்லைத்தீவு ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலை வாயிலை மூடி இன்று காலை 7.30 தொடக்கம் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

இந்நிலையில், கோட்டக் கல்வி அலுவலகத்தில் இருந்தோ வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்தோ அதிகாரிகள் வந்து தமக்கான பதிலை தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள போதும் காலை பதினொரு மணிவரை குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் யாரும் வருகை தந்து பதில் ஏதும் வழங்காத நிலையில், ஆர்பாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு மாணவர்களை பாடசாலை வளாகத்துக்குள் அனுப்பிய போதும், அதிபர் ஆசிரியர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், குறித்த இடத்துக்கு அதிகாரிகள் வரும்வரை தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *