உள்ளுராட்சி தேர்தலில் தனித்து களிமறங்கும் மலையக மக்கள் முன்னணி

Aarani Editor
1 Min Read
வேலுசாமி இராதகிருஷ்ணன்

உள்ளுராட்சி தேர்தலில் தனித்து களமிறங்கும் மலையக மக்கள் முன்னணி

உள்ளுராட்சி தேர்தலில் தலவாக்கலை பிரதேசத்தில் மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.

இதன்போது, பதுளை மாவட்டத்திலும் உள்ளுராட்சி சபை தேர்தலில் மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிட உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஏனைய மாவட்டங்களில் ஜக்கிய மக்கள் சக்தியோடு கூட்டணியாக களமிறங்குவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும், தலவாக்கலை மலையக மக்கள் முன்னணியின் கோட்டை, அங்கு நாம் தனித்து களமிறங்கி தலவாக்கலைஇ லிந்துலை சபைகளைக் கைப்பற்ற வேண்டும் எனவும், நுவரெலியா மாவட்டத்தில் ஏனைய இடங்களில் கூட்டணியாக சொல்வோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *