உள்ளூராட்சி தேர்தல்: தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான அறிவித்தல்.

Aarani Editor
1 Min Read
உள்ளூராட்சி தேர்தல்

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி தேர்தலில் தபால் வாக்குகளை அளிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடைகிறது.

முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை ஒகஸ்ட் 05 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மாவட்ட தேர்தல் அலுவலக முகவரி மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.

விண்ணப்பங்களை இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் நிராகரிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *