நுவரெலியா, பொகவந்தலாவ பகுதியில் தேயிலை மலைக்குள் ஒருவரின் சடலம் மீட்பு

Ramya
By
1 Min Read
சடலம் மீட்பு

நுவரெலியா, பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம், மத்திய பிரிவில் தேயிலை மலைக்குள் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆட்டுக்கு புல் அறுப்பதற்காக சென்ற குடும்பஸ்தரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஒரு பிள்ளையின் தந்தையான 57 வயது சிவனு பாக்கியநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆட்டுக்கு புல் அறுப்பதற்காக நேற்று காலை சென்றவர், இரவுவரை வீடு திரும்பாததால் தோட்ட மக்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், விசாரணைகளை ஆரம்பித்தனர்.

பின்னர் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக கிளங்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *