காலி, அங்குணுகொலபெலஸ்ஸ மேம்பாலத்தின் கீழ் இளைஞரின் சடலம்: பொலிசார் தீவிர விசாரணை

Ramya
By
0 Min Read
இளைஞரின் சடலம்

காலி, அங்குணுகொலபெலஸ்ஸ – அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் 23 வயதுடைய அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்‌ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *