65 மில்லியன் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டிற்காக, கொழும்பை சேர்ந்த 51 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 05 இல் வசிக்கும் குறித்த நபர், வணிக நடவடிக்கைகளுக்காக இரண்டு சந்தர்ப்பங்களில் பணத்தைப் பெற்றுள்ளார் என குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணைகளில், கைது செய்யப்பட்ட நபர் 30,200,000 ரூபாயைத் திருப்பிக் கொடுத்ததாகவும், மீதமுள்ள 34,800,000 ரூபாயைத் திருப்பித் தராமல் தலைமறைவாகி விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com