முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில், பாண் விற்பனை செய்யும் மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், பகுதியைச் சேர்ந்த செளந்தரநாயகம் பெனாட் (வயது 73) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்கு செல்வதற்காக வீதியோரமாக நின்றுக்கொண்டிருந்த போது, பாண் விற்பனை செய்யும் பெட்டியை ஏற்றி வந்த மோட்டார் சைக்கிள் மோதி கடந்த 8ம் திகதி குறித்த நபர் விபத்திற்குள்ளாகியுள்ளார்.
இதன்போது புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் மறுநாள், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர் குறித்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com