இலங்கை முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம், வரவிருக்கும் ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகபாராளுமன்றத்தில் இராஜினாமா செய்துள்ளார்.
ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தலைவரான நளீம், கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின், தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெற்று, பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
அவரது இராஜினாமா 2025 ஆம் ஆண்டின் முதல் பாராளுமன்ற இராஜினாமா என்பதும் குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com