க்ளீன் சிறிலங்கா, தேசிய திட்டத்திற்கு இணங்க, ‘மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் முல்லைத்தீவு திருமுறிகண்டி இந்து வித்தியாலய வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி ‘அழகான தீவு – புன்னகைக்கும் மக்கள் ‘ என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இலங்கையை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை ரீதியாக மாற்றும் க்ளீன் சிறிலங்கா தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதியின் பணிக்குழுவில் இலங்கை கடற்படை ஒரு முக்கிய பங்காளியாகும்.
குறித்த தேசிய திட்டத்திற்கு இணங்க, ‘மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, தனிப்பட்ட மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அடித்தளத்தை அமைக்கும் பாடசாலைகளில், சுத்தமான, அன்பான மற்றும் பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ள்ப்படுகின்றன.
இதன்மூலம் மகிழ்ச்சியான ஆக்கப்பூர்வமான, ஒழுக்கமான மற்றும் திறமையான, உற்சாகமான பாடசாலை சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்தல் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டின் முதல் கட்டத்தின் கீழ், கடற்படையானது 26 பாடசாலை வளாகங்களை மாணவர்களுக்கான கற்றல் நட்பு வளாகங்களாக மாற்றியமைத்தது.
அதன்படி, முல்லைத்தீவு திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தை குழந்தைகளின் கல்விக்கு மிகவும் உகந்த சூழலாக மாற்றுவதற்குத் தேவையான பழுதுபார்ப்புகளை மேற்கொள்வதற்கும் சுத்தம் செய்வதற்கும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ் சமூக பராமரிப்பு பங்களிப்பு வழங்கப்பட்டது.
Link : https://namathulk.com