பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்குக் கையளித்துள்ளார் எனவும், அதனால் பத்தாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் வழங்கிய இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சபையில் வாசித்தார்.
இதன்படி, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப்பட்டியல் ஊடாக பத்தாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com