பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : விவாதத்திற்கான திகதி அறிவிப்பு.

Ramya
By
1 Min Read
அறிக்கை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் ஏப்ரல் 10 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இந்த விவாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறும். இதன்படி, இதற்கான இரண்டு நாள் விவாதத்தில் பிறிதொரு நாளை மே மாதத்தில் ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

ஏப்ரல் 10ஆம் திகதி காலை 9.30 மணி முதல் இரவு 10 மணி வரை நிலையியற் கட்டளைகள் 22 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நாடாளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கை மார்ச் 14 அன்று சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *