உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 11 அம்சங்களுடன் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில், ஒரு வேட்பாளர் வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை எனின், அந்த வேட்பாளரின் பெயரை வேட்புமனுவிலிருந்து நீக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பெயருக்கு பதிலாக வேறு பெயரை சேர்க்க உரிமை இல்லை எனவும் ஆணைக்குழு கூறியுள்ளது.
வேட்பாளர் சார்பாக செலுத்தப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகை பறிமுதல் செய்யப்படும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com