கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் தங்க சங்கிலியை அறுத்த பெண் : பொலிசாரால் மடக்கி பிடிப்பு.

Ramya
By
1 Min Read
திருட்டு

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்த பெண்ணொருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருச்சிலுவை பவனியின் பொழுது பெண்ணொருவர் பவனியில் இருந்த மற்றொரு பெண்ணொருவரின் நான்கரை பவுண் தங்க சங்கிலியை அறுத்துள்ளார்.

உடனடியாகவே கடமையில் இருந்த பொலிசார் குறித்த பெண்ணை மடக்கி பிடித்து கைது செய்து சங்கிலியை கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர் தனது முகவரி தொடர்பாக மூன்று இடங்களை பொலிசாருக்கு கூறிய நிலையில், கச்சத்தீவுக்கு வருகை தந்த நீதவான், சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் .

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *