வரி செலுத்த தவறிய தனியார் நிறுவன பணிப்பாளர்கள் மூவருக்கு 06 மாத கால சிறை தண்டனை.

Sivarathan Sivarajah
1 Min Read
சிறை தண்டனை

கம்பஹா, கந்தானையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் சிகரெட்டுகளை விற்பனை செய்து விநியோகித்த மூன்று பணிப்பாளர்கள் பெறுமதி சேர் வரியாக, 233 மில்லியன் ரூபா செலுத்த தவறியமையினால், 06 மாதங்கள் எளிய வேலையுடன் கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் நான்கு பணிப்பாளர்களுக்கு எதிராக வருமான வரி ஆணையாளர், தாக்கல் செய்த வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு செலுத்தப்படாத பெறுமதி சேர் வரியை வழங்க 2024ஆம் ஆண்டு மே மாதம் குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.

இதன்படி, குற்றம்சாட்டப்பட்ட பணிப்பாளர்கள் நால்வரும், பதவியில் இல்லாததால், தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டதரணி தெரிவித்தார்.

இருப்பினும், வருமான வரி ஆணையாளரை, பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டதரணி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிறுவனத்தின் பணிப்பாளர்களாக பணியாற்றியபோது குறித்த பரியை செலுத்தத் தவறிவிட்டதாகவும், அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்ட பின்னரே வெளியேறிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறினார்.

இதனைக் கருத்திற்கொண்டு, கொழும்பு மேலதிக நீதவான், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்தத் தவறினால் அவர்களுக்கு 06 மாதங்கள் எளிய வேலையுடன் கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *