ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பொறுப்புகளையும் துறந்தார் இம்தியாஸ்.

Sivarathan Sivarajah
1 Min Read
இம்தியாஸ்

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கட்சியில் தான் வகிக்கும் அனைத்து பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் 11 பக்கங்கள் கொண்ட முன்மொழிவுகள் மற்றும் அவற்றை நினைவூட்டும் நான்கு பக்க கடிதங்களையும் இதற்கு முன்பு இரண்டு சந்தர்ப்பங்களில் கட்சியின் தலைமைக்கு அனுப்பியிருந்த இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், தனது இராஜினாமா கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் சுரங்க ரணசிங்கவிடம் ஒப்படைத்துள்ளார்.

மேலும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்காக கட்சித் தலைவர் மற்றும் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அவர் எழுதிய கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார்

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *