அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயற்படுத்தப்படும் க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 05 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை, வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களை அடைவதற்கு திறம்பட பயன்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று கொழும்பில் நடைபெற்றது.
க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தலைமையில் நடைபெற்றது.
நாட்டில் ஒழுக்கநெறி, சமூக மற்றும் சூழல் என்ற அனைத்து துறைகளிலும் புதிய மாற்றத்தை எதிர்பார்த்து, க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் ஒவ்வொரு நிறுவனமும் செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள், அதன்போது எழுந்துள்ள சவால்கள் மற்றும் நிதித் தேவைகள் குறித்து விரிவாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.
அதன்படி,குறித்த அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கான முன்னுரிமைகள் அடையாளம் காணப்பட்டு, நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
Link : https://namathulk.com