யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட படகு உட்பட மீனவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளால், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்து வருகின்றது.
இவ்வாறான அத்துமீறல்களை தடுக்கும் நோக்கில் கடற்படையினர் விசேட ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, கைது செய்யப்பட்ட மீன்பிடி படகு உள்ளிட்ட மீனவர்கள் மூவரும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டடு, யாழ்ப்பாணம் மீன்வள ஆய்வாளரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Link : https://namathulk.com