அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டில் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ள உத்தரவில்,
தேர்தல் விவகாரங்களில் அமெரிக்கா அடிப்படை மற்றும் அத்தியாவசிய பாதுகாப்பை நடைமுறைப்படுத்த தவறிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த உத்தரவு வாக்காளர் பட்டியலை பகிர்வதில் மாகாணங்கள் ஃபெடரல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வலியுறுத்தி உள்ளது.
இதேவேளை புதிய உத்தரவை அமுல்படுத்த மறுக்கும் மாகாணங்களுக்கு நிதி வழங்கப்படாது என குறித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com