அரசியல் நியமனங்கள் காரணமாக 300 இ.போ.ச பஸ் சாரதிகள் பாதிப்பு.

Aarani Editor
1 Min Read
இ.போ.ச

அரசியல் நியமனங்கள் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் 333 பஸ் சாரதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார்.

அரசியல் தலையீடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தொடர்பில்லாத பல்வேறு கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, முன்னர் பல்வேறு கடமைகளில் ஈடுபட்டிருந்த சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் பணிக்கமர்த்த இலங்கை போக்குவரத்து சபை முடிவு செய்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு நேற்று முதல் அமுலுக்கு வருவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன அறிவித்தார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *