இலங்கை இந்திய மீனவர் பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசமட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டவேண்டும் என்று வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகபேச்சாளர் அன்னராசா தெரிவித்தார்.
இலங்கை இந்தியமீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.
அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, 2016ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்றுவரை நடைமுறை படுத்தாமையினால் தமிழ்நாட்டிலும் வடமாகணத்திலும் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் ஊடகபேச்சாளர் குறிப்பிட்டார்.
எனவே, கடந்த 9 வருடங்களாக நடவடிக்கை மேற்கொள்ளாததையிட்டு இருநாட்டு மீனவர்களும் 9 வருடங்களுக்கு பின்பு இன்று கலந்துரையாடியுள்ளதாகவும் ஊடகபேச்சாளர் தெரிவித்தார்.
இருநாட்டிலும் பாதிக்கப்படுவது மீனவர்களே, எனவே இதனை தீர்க்கவேண்டிய அவசியத்தினையும் அதற்கான பொறிமுறைகள் தொடர்பாகவும் இன்று கலந்துரையாடியதாகவும் ஊடகபேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இருநாட்டு கடல்வளமும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற விடயத்தில் இருதரப்பும் இணங்கியுள்ளதாகவும் ஊடகபேச்சாளர் தெரிவித்தார்.
எனவே இருநாட்டு மீனவர் பிரச்சனைக்கான தீர்வு அரசாங்கத்தின் அனுசரணையோடு மிகவிரைவில் எட்டப்படும் எனவும் ஊடகபேச்சாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Link: https://namathulk.com