பட்டலந்த வதை முகாம் தொடர்பில் பேசும் அரசாங்கம், வடக்குக் கிழக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கும் நீதி வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
இதன்போது, பட்டலந்த வதை முகாம் தொடர்பில் அரசாங்கம் பேசுகின்றது. அதில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டியது நியாயமானது என பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
அதேபோன்று, அதன் பின்னர் நடந்த யுத்தத்தில் பல தமிழர்கள் வடக்குக் கிழக்கில் கொல்லப்பட்டனர் என வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர், இதற்கான நீதி வழங்கும் பொறிமுறை தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.
அவர்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
Link: https://namathulk.com