தேசிய பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா

Aarani Editor
1 Min Read
போக்குவரத்து ஆணைக்குழு

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் டொக்டர் பந்துர திலீப விதாரண, போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்

இந்த விடயத்தை போக்குவரத்து அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த மூன்றாவது அதிகாரி டொக்டர் பந்துர திலீப விதாரண ஆவார்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர்டொக்டர் ருவன் விஜயமுனி மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து ஏற்கனவே இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *