உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நேற்றைய தினம் 12 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவர் தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த மார்ச் மாதம் 3ஆம் திகதி முதல் இதுவரை 13 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 11 வாகனங்களும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
link: https://namathulk.com/
